தேனி

உத்தமபாளையம் அருகே 60 மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

உத்தமபாளையம் அடுத்த க.புதுப்பட்டியில் புதன்கிழமை அனுமதியின்றி  மதுப்பாட்டில் விற்றவரை கைது செய்து அவரிடமிருந்து 60 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 நீதிமன்ற உத்தரவின் பேரில்  க.புதுப்பட்டி  தேசிய நெடுஞ்சாலை அருகே  இயங்கி வந்த மதுக்கடை மூடப்பட்டது. இதனை அடுத்து சிலர்,  அனுமதியின்றிஅப்பகுதிகளில் மதுபாட்டில்களை விற்பதாக உத்தமபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 இதைத் தொடர்ந்து புதன்கிழமை அப்பகுதியில்  ரோந்து சேன்ற போது,  க.புதுப்பட்டி வடக்கு  தெருவைச் சேர்ந்த  தர்மர் (55) என்பவரிடமிருந்து 60 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து , அவரை கைது  செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT