தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேட்பாரற்று கிடந்த 40 கிலோ எடையுள்ள கஞ்சா பைகைளை திங்கள்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கூடலூர்-கம்பம் சாலை, செல்வபுரம் விலக்கு பகுதியில் கஞ்சா பைகள் கேட்பாரற்று கிடப்பதாக கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சார்பு ஆய்வாளர் திவான் மைதீன் தலைமையில் போலீஸார் அங்கு சென்று பார்த்த போது, 20 பைகளில் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 40 கிலோ எடையுள்ள கஞ்சா கிடப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இருவர் கைது: கம்பம், உத்தமபுரம்-கோம்பை சாலையில் நாககாளியம்மன் கோயில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி(42), பாண்டியன்(54) ஆகியோரிடம் போலீஸார் 5 கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.