காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா
பெரியகுளம் அருகே சில்வார்பட்டி காளியம்மன்திருக்கோயில் பங்குனித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
பெரியகுளம் அருகே சில்வார்பட்டி காளியம்மன்திருக்கோயில் பங்குனித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவிழாவினை முன்னிட்டு காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை கரகம் மற்றும் பால்குடம் எடுத்து வரப்பட்டது. புதன்கிழமையன்று மாலை பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.