முகப்பு
தேனி

பெரியகுளத்தில் பங்குனி தேரோட்டம்: துணை முதல்வர் பங்கேற்பு

பெரியகுளம் ராஜேந்திர சோழிஸ்வரர் திருக்கோயிலில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்குனி தேரோட்டத்தை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்று தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

Updated On : 30 மார்ச், 2018 at 1:24 AM
பகிர்:

பெரியகுளம் ராஜேந்திர சோழிஸ்வரர் திருக்கோயிலில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்குனி தேரோட்டத்தை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்று தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
ராஜேந்திர சோழிஸ்வரர் பங்குனி தேரோட்ட திருவிழா மார்ச் 21 ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நாள்தோறும் சுவாமி பல்வேறு 
வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.          வியாழக்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு  மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.  உற்சவர் சோமாஸ்கந்தர் தேரில் ஏழுந்தருளினார்.
  மாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தார். அதன் பின் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
தேர் திருவள்ளுவர் சிலை, தெற்கு ரத வீதி வழியாக நிலையை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் கைலாசநாதர் கோயில் ஆலோசனைக்குழு உறுப்பினர் வி.ப.ஜெயபிரதீப் மற்றும் திருப்பணிக்குழு தலைவர் எல்.சசிதரன், 
திருப்பணிக்குழு உறுப்பினர் பி.சி.சிதம்பர சூரியவேலு மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.