முகப்பு
தேனி

ஆண்டிபட்டியில் அனுதியின்றி கிரானைட் கற்கள் எடுத்துச் சென்ற லாரி பறிமுதல்

ஆண்டிபட்டியில் அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்துச் சென்ற லாரியை கனிமவளத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On : 22 மே, 2018 at 12:30 AM
பகிர்:

ஆண்டிபட்டியில் அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்துச் சென்ற லாரியை கனிமவளத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
தேனி பகுதியில் இருந்து லாரியில் கிரானைட் கற்கள் கடத்திச் செல்வதாக கனிமவளத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கனிமவளத்துறை உதவி இயக்குநர் சாம்பசிவம் மற்றும் ஆண்டிபட்டி வட்டாட்சியர் செல்வம் ஆகியோர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது லாரியில் பல லட்சம் மதிப்புள்ள கிரானைட் கற்கள் அனுமதியின்றி எடுத்து செல்வது தெரியவந்தது. மேலும் சோதனையின் போது லாரி ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.
இதனையடுத்து லாரியை பறிமுதல்
செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதில் ஈடுபட்டவர்கள் யார், தப்பியோடிய ஓட்டுநர் மற்றும் எங்கு எடுத்து செல்லப்படுவது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.