சிற்றுந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு
தேனி அருகே அரண்மனைப்புதூரில் சனிக்கிழமை இரவு சிற்றுந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
தேனி அருகே அரண்மனைப்புதூரில் சனிக்கிழமை இரவு சிற்றுந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
அரண்மனைப்புதூர், முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி ராஜம்மாள்(60). இவர், அரண்மனைப்புதூரில் இருந்து தேனிக்குச் செல்வதற்காக சிற்றுந்தில் ஏறியுள்ளார். ராஜம்மாள் சிற்றுந்து படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்த போது ஓட்டுநர் கவனக் குறைவாக பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ராஜம்மாள் சிற்றுந்தில் இருந்து தவறி கீழே விழுந்ததார். இதில், பலத்த காயமடைந்த ராஜம்மாள் தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து, சிற்றுந்து ஓட்டுநர் அரண்மனைப்புதூரைச் சேர்ந்த விஜயன்(34) என்பவரை கைது செய்தனர்.