முகப்பு
தேனி

கூடலூர் தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 19 பேர் கைது: ரூ. 1.33 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சனிக்கிழமை இரவு பணம் வைத்து சூதாடிய கேரளத்தைச் சேர்ந்த 19 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 2 செப்டம்பர் 2018, 12:49 am IST
பகிர்:


தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சனிக்கிழமை இரவு பணம் வைத்து சூதாடிய கேரளத்தைச் சேர்ந்த 19 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர் பேருந்து நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு பணம் வைத்து சூதாடுவதாக கூடலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் ஷாஜஹான் போலீஸாருடன், சென்று சோதனை செய்தார். அப்போது அங்குள்ள அறைகளில் பணம் வைத்து சிலர் சூதாடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து, கைது செய்தனர்.விசாரணையில், பிடிபட்டவர்கள் அனைவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து, 500-ஐ போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.