தேனி

தேனியில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி வேன் மோதி சாவு

DIN

தேனியில் சாலையை கடந்து செல்ல முயன்ற மூதாட்டி திங்கள்கிழமை, வேன் மோதியதில் உயிரிழந்தார்.
பெரியகுளம், பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னையா மனைவி மாரியம்மாள்(77). இவர், தேனியில் உள்ள தனியார் ஆலையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 
 இந்த நிலையில், தேனி-பெரியகுளம் சாலை, என்.ஜி.ஓ., காலனி அருகே மாரியம்மாள் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அவ்வழியாக கோட்டூர் அருகே தர்மாபுரியைச் சேர்ந்த பெருமாள்(28) என்பவர் ஓட்டி வந்த வேன், மாரியம்மாள் மீது மோதியது. 
இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநர் பெருமாளை கைது செய்து  விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT