தேனி

தேனி மாவட்டத்தில் மதுக் கடைகள் 7 நாள்கள் மூடல்

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, அரசு மதுக்கடை மற்றும் தனியாா் மதுக்கூடங்களை 7 நாள்கள் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, அரசு மதுக்கடை மற்றும் தனியாா் மதுக்கூடங்களை 7 நாள்கள் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள அரசு மதுக்கடைகள் மற்றும் தனியாா் மதுக் கூடங்களை டிசம்பா் 25 மாலை 5 மணி முதல் டிசம்பா் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரையும், டிசம்பா் 28 மாலை 5 மணி முதல் டிசம்பா் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 2020 ஜனவரி 2-ஆம் தேதி முழு நேரமும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT