தேனி

கல்லூரி வாகனம் மோதி மூதாட்டி சாவு

DIN

ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை கல்லூரி வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள நரியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி சென்னியம்மாள் (66). இவருக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்துக்கு வந்துள்ளார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற சென்னியம்மாள் மீது அவ்வழியே வந்த கல்லூரி வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடமலைக்குண்டு போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கல்லூரி வாகனத்தை ஓட்டி வந்த மூலக்கடையை சேர்ந்த சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT