போடியில் கஞ்சா விற்ற தம்பதி கைது
போடி கீழத் தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீஸார் அப்பகுதியில்
போடி கீழத் தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீஸார் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது, கீழத்தெருவைச் சேர்ந்த முருகேசன் (65) என்பவரது வீட்டுக்குச் சென்று சிலர், பொட்டலம் வாங்கிச் செல்வது தெரியவந்தது.
உடனே, போலீஸார் முருகேசன் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, வீட்டில் முருகேசனும், அவரது மனைவி சரசும் (58), கஞ்சாவை பதுக்கி வைத்து பொட்டலம் போட்டு விற்று வந்ததும் தெரியவந்தது.
போடி நகர் காவல் நிலைய போலீஸார், கணவன்-மனைவி மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒன்றேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.