தேனி

ஒட்டன்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

DIN

ஒட்டன்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கேரள மாநிலம் சபரிமலை ஜயப்பன் கோயில் விவகாரத்தில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்த விடாமல், அதை அரசியலாக்க பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாகக் கூறி, அதை கண்டித்து ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சிவமணி தலைமை வகித்தார். 
மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கருணாகரன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி கலந்து கொண்டு பேசினார். 
இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சின்னக்கருப்பன், நாகேஸ்வரன், தேவராஜ், பாப்புச்சாமி, எம்.பழனிச்சாமி, ஜி.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT