தேனி

ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

DIN


 திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சிந்தலப்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
அதே போல குடிநீர் விநியோக்கும் போது ஒரு சில பகுதிகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் திருடப்படுவதால் மற்ற இடங்களுக்கு குடிநீர் செல்வது தடைப்படுகிறது. 
இதனால் குடிநீருக்கு அவதிப்பட்ட பொதுமக்கள் சனிக்கிழமை அம்பிளிக்கை-ஓடைப்பட்டி செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அம்பிளிக்கை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்பட்டதின் பேரில் அவர்கள் கலைந்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT