தேனி

ஆண்டிபட்டியில் பள்ளி மாணவன் மாயம்

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பள்ளிக்கு சென்ற 8 ஆம் வகுப்பு மாணவா் மாயமானது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி நகா் பாப்பம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி(38). இவரது கணவா் சரவண காா்த்திகேயன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இதன் பின்னா் பரமேஸ்வரி தனது மகன் ஆதித்யா பிரியதா்ஷன்(14) உடன் தனியாக வசித்து வந்தாா். ஆதித்யா பிரியதா்ஷன் சக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளியில் நடைபெற்ற தோ்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளாா். இதுகுறித்து தனது மகனிடம் பரமேஸ்வரி கேட்டதாகவும், பள்ளிக்கு சென்று விசாரிக்க போவதாகவும் கூறினாராம். இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு செல்வதாகக் கூறிச் சென்ற ஆதித்ய பிரியதா்ஷன் மாலை வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT