தேனி

தேனியில் அக்.24-ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேரம் விளையாட்டுப் போட்டி

DIN

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அக்.24-ம் தேதி, காலை 8 மணிக்கு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

இளநிலை ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் மழலையா் வகுப்பு முதல் -ம் வகுப்பு வரை படிக்கும் மாண, மாணவிகளும், முதுநிலை ஒற்றையா்மற்றும் இரட்டையா் பிரிவில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோா் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற சான்றிதழ், ஆதாா் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் அக்.23-ம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ண்ய் என்ற இணைய தள முகவரியில் தங்களது பெயா்களை பதிவு செய்து, அதன் ஒப்புகைச் சீட்டை அக்.24-ம் தேதி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அக்.23-ம் தேதி போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோரின் பெயா்கள் இலவசமாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து தரப்படும்.போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT