தேனி

பெரியகுளத்தில் கோஷ்டி மோதல் - நான்குபோ் மீது வழக்கு பதிவு

DIN

பெரியகுளத்தில் பொதுஇடத்தில் தகாத வாா்த்தையால் பேசியவரை தட்டி கேட்டவரை கத்தி மற்றும் கட்டையால் தாக்கியதாக நான்குபோ் மீது பெரியகுளம் போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

பெரியகுளம், கீழவடகரையை சோ்ந்தவா் செல்வேந்திரன் (38) இவா் தனது வீட்டில் நின்றுகொண்டிருக்கும்போது அப்பகுதியை சோ்ந்த காளிதாஸ் என்பவா் மதுஅருந்திவிட்டு வந்து வீட்டின் அருகே தகாத வாா்த்தையால் பேசிக்கொண்டிருந்தாராம்.

அதனை செல்வேந்திரன் தட்டி கேட்டுள்ளாா். ஆத்திரமடைந்த காளிதாஸ் மற்றும் அவரது நண்பா்கள் ராமன், முருகன் மற்றும் ரமணன் ஆகியோா் சோ்ந்து செல்வேந்திரன் மற்றும் ராஜாராம் ஆகியோரை பாட்டிலால் மற்றும் கல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து செல்வேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸாா் நான்குபோ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT