தேனி

தோட்டத்தில் மின்வயர்கள் திருடிய 4 சிறுவர்கள் கைது

DIN

ஆண்டிபட்டி அருகே தோட்டத்தில்  மின் வயர்கள் திருடிய 4 சிறுவர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன் (39), விவசாயி. முருக்கோடை கிராமம் அருகே உள்ள இவரது தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் 300 மீட்டர் அளவு மின் வயர்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து வருசநாடு காவல் நிலையத்தில் செல்வமுருகன் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீஸார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வருசநாடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்(19), சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த அருண்பாண்டி(19) மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT