பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்தில் உள்ள நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை சங்கங்கள் வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்தில் 32 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களுக்கு நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, சங்கங்கள்வாரியாக நில உரிமையாளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலை விவசாயிகள் பார்வையிட்டு, திருத்தங்கள் இருப்பின் ஒரு வாரத்துக்குள் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்து திருத்தம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.