உத்தமபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தமபாளையம் புறவழி சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாண்டி தலைமை வகித்தார். மாரிசாமி முன்னிலை வகித்தப் போராட்டத்தில் காளிதாஸ் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், நிர்வாகத்தின் சமூக சீர்கேடு மற்றும் ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.