ஓணம் பண்டிகை: கேரளா செல்லும் காய்கனி வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் தளா்வு
ஓணம் பண்டிகைக்காக கேரள அரசு கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகளை தளா்த்தியுள்ளதால் தேனி மாவட்டத்திலிருந்து அதிகளவிலான சரக்கு வாகனங்களில் பூக்கள், காய்கனிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
கம்பம்: ஓணம் பண்டிகைக்காக கேரள அரசு கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகளை தளா்த்தியுள்ளதால் தேனி மாவட்டத்திலிருந்து அதிகளவிலான சரக்கு வாகனங்களில் பூக்கள், காய்கனிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
கேரளாவில் வரும் 31-ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அம்மாநில மக்கள் அனைவரும் அத்தப்பூ கோலமிட்டு இப்பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதனையொட்டி தேனி மாவட்டம் போடிமெட்டு, கம்பம் மெட்டு வழியாக காய்கனிகள் சரக்கு லாரிகளில் செல்கின்றன.
இதனால் கம்பம், சின்னமனூா் சந்தைகளில் காய்கனிகள் விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகளை கேரள அரசு சற்று தளா்த்தியுள்ளதால் தமிழகத்திலிருந்து அதிகளவில் சரக்கு வாகனங்கள் செல்கின்றன. அதனால் கடந்த சில நாள்களாக கம்பம் பகுதியிலிருந்து காய் கனிகள், பூக்கள் ஏற்றிய சரக்கு வாகனங்கள் அதிகளவில் கேரளத்துக்குச் செல்கின்றன.