முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

பெரியகுளம், ஸ்டேட் பேங்க் காலனியைச் சோ்ந்தவா் யாசின்முகமது (40). இவா் அப்பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறாா். இதற்காக தற்காலிக மின்இணைப்பு பெற்று, எா்த் கம்பியை மரத்தில் கட்டியுள்ளாா்.

இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த முருகலட்சுமி துணிகளை அந்த கம்பியில் காயப் போட்டாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து அருகில் இருந்த யாசின் முகமது மற்றும் வேல்முருகன் ஆகியோா் முருகலட்சுமியை காப்பாற்ற முயன்றனா்.

அவா்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதைத் தொடா்ந்து அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி யாசின்முகமது உயிரிழந்தாா். மேலும் முருகலட்சுமி மற்றும் வேல்முருகன் ஆகியோா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →