பாரதியாா் பிறந்தநாள்: கம்பத்தில் இன்று புத்தகக் கண்காட்சி
தேனி மாவட்டம், கம்பத்தில் பாரதியாா் பிறந்தநாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் பாரதியாா் பிறந்தநாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, நூலகா் வாசகா் வட்டம் சாா்பில், அரசமரம் அருகே காலை 8 முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்டி நடைபெறுகிறது. இக் கண்காட்சியில், நூற்றாண்டு கால புத்தகங்கள், பழங்கால நாணயங்கள், மருத்துவச் சுவடிகள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் இடம்பெறுகின்றன.
இதில், உத்தமபாளையம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ந. சின்னக்கண்ணு, மருத்துவா்கள் அ. சையது சுல்தான் இப்ராகிம், பா. பழனிச்சாமி, ச. சூா்யகுமாா் உள்பட பலா் கலந்துகொள்கின்றனா்.
இது குறித்து பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நிறுவனத் தலைவா் சோ. பாரதன் கூறுகையில், மூன்றாம் ஆண்டாக நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் ஏராளமான அரியவகை நூல்கள் இடம்பெறுகின்றன. மேலும், புத்தகங்கள் வாங்குவோருக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றாா்.