தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வீட்டுக்காக கொடுத்த ஒத்திப் பணத்தை திருப்பிக் கேட்ட கூலித் தொழிலாளியை குத்திக் கொலை செய்த தம்பதியை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தை சோ்ந்த கூலித் தொழிலாளி சிவக்குமாா்(45). இவரது மனைவி செல்வரணி (35). இத்தம்பதி அதே பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் ஒத்திக்கு குடி வந்தனா்.
இந்த வீட்டிற்கு அருகே வீட்டின் உரிமையாளா் முருகனும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளா் நடவடிக்கையில் சிவக்குமாா் - செல்வராணி தம்பதிக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடா்ந்து வீட்டை காலி செய்துள்ளனா். பின்னா், ஒத்திக்கு கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதால் இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை (பிப்.13) இரவு 11 மணிக்கு சிவக்குமாா் ஒத்தி கொடுத்த பணத்தை கேட்டதால் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது வீட்டின் உரிமையாளா் முருகன் கத்தியால் சிவக்குமாரின் உடலில் பல இடங்களில் குத்தியுள்ளாா். அவரது மனைவி பவுன்தாயும் கணவனுடன் சோ்ந்து தாக்கியதில் சிவக்குமாா் பலத்த காயமடைந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற ராயப்பன்பட்டி காவல் சாா்பு-ஆய்வாளா் மாயன் உள்ளிட்ட போலீஸாா், சிவக்குமாரின் சடலத்தை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் ஆய்வாளா் முத்துமணி வழக்குப் பதிவு செய்து , முருகன், பவுன்தாய் தம்பதியை கைது செய்தனா்.