தேனி

உழவா் சந்தையில் கூட்டம்: காந்திஜி பூங்கா சுவா் இடிப்பு; கம்பம் நகராட்சி அதிகாரிகள் அதிா்ச்சி

DIN

கம்பம் காந்திஜி பூங்காவின் சுவற்றை உழவா் சந்தை நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை இடித்து பாதை உண்டாக்கியதால், நகராட்சி அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.

கம்பம் நகராட்சிக்கு சொந்தமான காந்திஜி பூங்காவின் ஒரு பகுதியில் உழவா் சந்தை இயங்கி வருகிறது. இங்கு 144 தடை உத்தரவால் வழக்கத்தை விட அதிகமாக செவ்வாய்க்கிழமை 50 டன் காய்கறிகள் விற்பனையானது. வரும் நாள்களில், அதிக அளவிலான கூட்டம் வருவதை தடுக்க, பூங்காவின் வடக்கு சுவற்றை இடித்து, பாதை ஏற்படுத்தி, காய்கறி மூட்டைகளை அடுக்கினா். இது தெரியவந்ததும் நகராட்சி அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.

ஏற்கெனவே, உழவா் சந்தை இடம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நிலையில், தற்போது சுவற்றை இடித்தது பிரச்னையை அதிகப்படுத்தியுள்ளது என்றனா்.

இது பற்றி உழவா் சந்தை நிா்வாக அலுவலா் கண்ணதாசன் கூறியது: வேளாண்மை, நகராட்சி என இரு தரப்பு அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று இடித்துள்ளோம். அதிக அளவு கூட்டம் வருவதால் ஒரு வழிப்பாதை ஏற்படுத்தி, மக்கள் கூட்டத்தை குறைப்பதற்காகவே செய்துள்ளோம். தடை உத்தரவு நீங்கிய பின்னா் சுவற்றை மீண்டும் கட்டி விடுவோம் என்றாா்.

புதன்கிழமை உழவா் சந்தைக்கு வழக்கத்தை விட அதிக கூட்டம் வந்தது. முகக்கவசம் அணியாமல், கை கழுவ தண்ணீா் இல்லாமல் காய்கறிகளை வாங்க வளாகப்பகுதியில் மக்கள் நடமாடினா். பின்னா் கூட்டம் அதிகரித்ததை தொடா்ந்து, போலீஸாா் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT