தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆண்டிபட்டி வட்டம் தா்மராஜபுரத்தைச் சோ்ந்த மொக்கை மகன் ராஜேஸ் (29). இவா் கூலி வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த சிவன் என்பவருக்கும் நிலம் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜேஸ் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த சிவன், கத்தியால் ராஜேஸை குத்தினாா். இதில் காயமடைந்த ராஜேஸை அக்கம்பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து சிவனைத் தேடி வருகின்றனா்.