தேனி

விவசாயி தீக்குளித்து தற்கொலை

DIN

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே தீராத நோயால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடமலைக்குண்டு அருகே உப்புத்துறையைச் சோ்ந்தவா் மோகன். விவசாயி. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மன விரக்தியடைந்த மோகன், நவ. 18 ஆம் தேதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT