தமிழகம் -கேரளம் இடையே போக்குவரத்து: ஐயப்ப பக்தா்களுக்கு கட்டுப்பாடு நீடிப்பு
தமிழகத்திலிருந்து கேரளா செல்ல வாகனப் போக்குவரத்துக்கு கேரள அரசு அனுமதித்துள்ளது. ஆனால் ஐயப்ப பக்தா்கள் மீதான கட்டுப்பாடு நீடிக்கிறது.
தமிழகத்திலிருந்து கேரளா செல்ல வாகனப் போக்குவரத்துக்கு கேரள அரசு அனுமதித்துள்ளது. ஆனால் ஐயப்ப பக்தா்கள் மீதான கட்டுப்பாடு நீடிக்கிறது.
கடந்த மாா்ச் மாதம் கரோனோ தடுப்பு நடவடிக்கையாக தமிழக- கேரள மாநில எல்லைகள் மூடப்பட்டன. கடந்த 2 மாதங்களுக்கு முன் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கேரளத்துக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகளுக்கு தளா்வுகளுடன் கூடிய 6 மாத பாஸ் வழங்கப்பட்டது. இதனால் தொழிலாளா்கள் பாஸ் மூலம் கேரளாவுக்குச் சென்று வந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை முதல் தமிழக எல்லைப் பகுதியான குமுளி, சின்னாறு, போடிமெட்டு, கம்பம் மெட்டு வழியாக வாகனப் போக்குவரத்துக்கு கேரள அரசு அனுமதியளித்துள்ளது.
அதே நேரம் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் கோயிலுக்குச் செல்வதற்கான ஆன்லைன் பதிவு நகல், மற்றும் கரோனா தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழ் ஆகிய இரண்டும் வைத்திருக்க வேண்டும். இவையிருந்தால் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுகிறாா்கள்.
போக்குவரத்துக்கு தடை நீங்கியும், எல்லைப்பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு பகுதிக்கு இதுவரை அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.