ஆந்திர மாற்றுத்திறனாளி பக்தா் சபரிமலைக்கு நடைபயணம்
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சபரிமலைக்கு நடைபயணமாக செல்லும் மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தா் ஞாயிற்றுக்கிழமை பெரியகுளம் வந்தடைந்தாா்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சபரிமலைக்கு நடைபயணமாக செல்லும் மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தா் ஞாயிற்றுக்கிழமை பெரியகுளம் வந்தடைந்தாா்.
ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சோ்ந்தவா் சுரேஷ் (45). தங்க நகைகள் செய்யும் இவருக்கு திருமணமாகவில்லை. இவருக்கு தாய் மற்றும் தங்கை உள்ளனா். தங்கைக்கு திருமணமாகிவிட்ட நிலையில் தாயுடன் நெல்லூரில் வசித்து வருகிறாா். கடந்த 10 மாதங்களுக்கு முன் இரு சக்கர வாகன விபத்தில் இடது கால் முறிவு ஏற்பட்டு,
கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் ஒரு கால் இல்லாத நிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கவேண்டும் என்ற நோக்கில் கடந்த செப்டம்பா் மாதம் நெல்லூரில் இருமுடி கட்டி தனது பயணத்தை துவக்கியுள்ளாா். டிசம்பா் 19 ஆம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்கும் வகையில் இணையதளத்தில் பதிவு செய்து வைத்துள்ளாா்.ஜதரபாத்தில் உள்ள சிலருடன் கடந்த 22 ஆண்டுகளாக வாகனத்தில் ஐயப்பன்கோயிலுக்கு சென்று வந்துள்ளாா்.
இந்த முறை நடைப்பயணமாக செல்லவேண்டும் என கூறி தனியாக பயணத்தை துவக்கியுள்ளாா். இவரது குடும்பத்தினரும் இவரை ஊக்கப்படுத்தி வழியனுப்பி வைத்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமைபெரியகுளத்துக்கு வந்த இவரை பெரியகுளம் பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனா்.