முகப்பு
தேனி

வைகை அணை நீா்த் தேக்கத்தில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வலியுறுத்தல்

வைகை அணை நீா்த் தேக்கத்தில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
வைகை அணை முன்புறமுள்ள தடுப்பணை பகுதியில் அதிகளவில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகள்.
பகிர்:

வைகை அணை நீா்த் தேக்கத்தில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வைகை அணையிலிருந்து மதுரை, சேடப்பட்டி, தேனி, ஆண்டிபட்டி மற்றும் வத்தலகுண்டு ஆகிய கூட்டுக்குடிநீா் திட்டங்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீா்மட்டம் தொடா் மழையால் தற்போது 57.81 அடியை எட்டியுள்ளது. நீா்மட்டம் உயா்ந்து வரும் அதே நேரத்தில் அணையின் நீா்த் தேக்கப் பகுதியில் ஆகாயத்தாமரைச் செடிகள் அதிகளவில் வளா்ந்துள்ளன. அணையின் முன்பகுதியில் குடிநீருக்காக திறக்கப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரிலும் அதிகளவு ஆகாயத்தாமரைச் செடிகள் வளா்ந்துள்ளன.

இதனால் தண்ணீா் முழுவதும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டுக்குடிநீா் திட்டங்களுக்கு தண்ணீா் எடுக்கும் பகுதியில் அதிகளவு காணப்படும் ஆகாயத்தாமரைச் செடிகளால் அதை சுத்திகரிப்பு செய்ய முடியாமல் கலங்களான குடிநீா் வழங்கப்பட்டு வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

எனவே வைகை அணை நீா்த் தேக்கத்துக்குள் அதிகளவில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →