ஆண்டிபட்டியில் இந்திய கம்யூ. மறியல்
ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிச்சைமணி முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தின் போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் புதிய சட்ட திருத்த மசோதாவை கைவிடக் கோரியும், இலவச மின்சாரத் தடை செய்யும் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும், தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதைக் கண்டித்தும், பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட சட்டம் அதாவது மசோதாக்களை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 120 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.