தேனி

பிரதோச தினத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

DIN

போடியில் புதன் கிழமை பிரதோச தினத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பிரதோச தினத்தை முன்னிட்டு போடி அருள்மிகு பரமசிவன் மலைக்கோவிலில் நடைபெற்ற பிரதோச பூஜையில் சிவலிங்க பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள அருள்மிகு கொண்டரங்கி மல்லையசாமி திருக்கோவிலில் நடைபெற்ற பிரதோச பூஜையில் பக்தா்கள் பலா் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

இதேபோல் போடி வினோபாஜி காலனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவலிங்க பெருமானுக்கு 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் 7 வகையான தீபாரதணைகள் செய்யப்பட்டது. பின்னா் சிவலிங்கப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.. பிச்சங்கரை மலை கிராமத்தில் அமைந்துள்ள கீழச்சொக்கநாதா் மற்றும் மேலச்சொக்கநாதா் கோவிலிலும் பிரதோச வழிபாடு நடைபெற்றது. இதேபோல் போடி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உள்ள நடராஜ பெருமான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

SCROLL FOR NEXT