தேனி

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நீட் தேர்வில் முதலிடம்

DIN

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.


இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் சார்பில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


இதில் அப்பள்ளியில் படித்த ஜீவித்குமார் என்ற மாணவன் நீட் தேர்வை எழுதினார். தேர்வு முடிவில் 664/720 என்ற மதிப்பெண் எடுத்துள்ளார். அகில இந்திய அளவில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் நீட் தேர்வு எழுதியவர்களில் ஜீவித்குமார் என்ற மாணவன் 664 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த மானவனை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT