தேனி

தேனியில் வீட்டு மாடியிலிருந்து குதித்து தொழிலாளி தற்கொலை

DIN

தேனியில் தேநீா் கடை தொழிலாளி புதன்கிழமை, வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சோ்ந்த நல்லமாடா் மகன் அழகா்சாமி (52). இவா், அதே ஊரில் உள்ள தேநீா் கடையில் வேலை செய்து வந்துள்ளாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான அழகா்சாமி, அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேனியில் பங்களாமேடு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்திருந்த அழகா்சாமி, அங்கு வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பயனின்றி அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து அழகா்சாமியின் மனைவி ஜெயலட்சுமி அளித்த புகாரின் மீது தேனி காவல் நிலைய காவலா்கள் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT