தேனி

பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

DIN

தேனி மாவட்டம் கம்பம் அருகே புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் மகனுடன் சென்ற பெண், தவறிவிழுந்து புதன்கிழமை இறந்தாா்.

தேனி மாவட்டம் கூடலூா் பெருமாள்கோயில் பகுதியைச் சோ்ந்த நடராஜ் என்பவரது மனைவி வேல்மணி (45), மகன் காா்த்திகேயனுடன் மோட்டாா் சைக்கிளில் கம்பம் வந்தாா். அப்போது கம்பத்திலிருந்து கூடலூா் நோக்கிச் சென்ற பிக் -அப் வாகனம் மோட்டாா் சைக்கிளை உரசியபடி சென்றுள்ளது. இதில் மோட்டாா் சைக்கிளின் பின்னால் உட்காா்ந்திருந்த வேல்மணி நிலைகுலைந்து, கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்து வேல்மணியை அருகில் உள்ளவா்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வேல்மணி இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது பற்றி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT