தேனி

கம்பத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

DIN

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து, கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கஞ்சா கடத்த முயன்ற வாலிபரை, போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலிருந்து, கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளா் கே.சிலைமணி தலைமையிலான போலீஸாா் கோம்பைச்சாலையில் ரோந்து சென்றனா்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து சென்ற, கம்பம் இரண்டாவது வாா்டு, உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த மகாராஜா என்பவரின் மகன் பாா்த்திபன் (33) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.

அப்போது அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 2 கிலோ கஞ்சா இருந்ததும், அதை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து பாா்த்திபனை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT