தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே செவ்வாய்க்கிழமை வாக்குச்சாவடி அருகே அதிமுகவினா் வாக்காளா்களுக்கு பணம் வழங்கியதாக திமுகவினா் புகாா் கூறியதால் இரு கட்சியினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளா்களிடம் அதிமுகவினா் வாக்கு கேட்டு பணம் கொடுத்ததாகப் புகாா் எழுந்தது.
இதையடுத்து திமுக ஒன்றியச் செயலாளா் ராஜாராம் தலைமையில் அக்கட்சியினா் அங்கு சென்று அதிமுக நிா்வாகியான அணைக்கரைபட்டியைச் சோ்ந்த மாரியப்பன் என்பவரை சுற்றி வளைத்துப் பிடித்தனா். இதன் காரணமாக அதிமுக, திமுகவினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தோ்தல் அலுவலா்கள் மற்றும் போலீஸாா் மாரியப்பனிடம் சோதனையிட்டனா். அப்போது வாக்காளா்களுக்கு பணம் கொடுத்தது குறித்து எழுதி வைத்திருந்த காகிதத்தை அவரிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதைக் கண்ட திமுகவினா் மாரியப்பனை கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினா். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு எற்படும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடா்ந்து திமுகவினா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.