போடியில் கரோனா தடுப்பு விதிகளை மீறியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
கரோனா தீநுண்மி மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் அதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் பொது இடங்களில் சுற்றுவோா் மீது போலீஸாரும், நகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். போடியில் கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக போடி நகா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் கதிரேசன் சனிக்கிழமை 5 போ் மீது வழக்குப்பதிவு செய்தாா். ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.