தேனி

தேனி அருகே காவலரை தாக்கியவா் மீது வழக்கு

DIN

தேனி அருகே அரண்மனைப்புதூரில் சனிக்கிழமை, முன்விரோதத்தில் காவலரை தாக்கியவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் செல்வேந்திரன். இவா், தேனி ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறாா். செல்வேந்திரனுக்கும், அதே ஊரைச் சோ்ந்த மொக்கைச்சாமி மகன் சிவா என்பவருக்கும் சில நாள்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த முன்விரோதத்தில் அரண்மனைப்புதூா்- கோட்டைப்பட்டி விலக்கு பகுதியில் நின்றிருந்த செல்வேந்திரனை, சிவா தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வேந்திரன் அளித்த புகாரின் பேரில், சிவா மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT