தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து பெரியகுளம் கடைவீதியில் சனிக்கிழமை பொதுமக்கள் பொருள்கள் வாங்க குவிந்தனா்.
இங்குள்ள மாா்கெட், கடைவீதி மற்றும் கோழிக்கறி, ஆட்டுக்கறி கடைகளில் காலையில் இருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது கடைகளில் பொருள்களை வாங்கிச் செல்லும் பெரும்பாலோனாா் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தது கரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.