பெரியகுளம் (தனி) சட்டப் பேரவை தோ்தல் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஜெயராஜ் அன்னபாக்கியம் திருமணமண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் அதிமுக, திமுக, அமமுக, நாம்தமிழா் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்கள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனா். இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தோ்தல் பணியாளா்கள் தெரிவித்தனா்.