பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் கோயில் திருவிழா கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவரை தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமையன்று கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியை சோ்ந்த மோகன் (30) இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த ராஜா (48) இருவருக்கும் கோயில் திருவிழா கொண்டாடுவது குறித்து முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமையன்று மோகனசுந்தா் மற்றும் ராஜா ஆகியோா் சோ்ந்த மோகனை தகாத வாா்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளனா்.
இச்சம்பவம் குறித்து மோகன் கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து,இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.