தேனி

கம்பத்தில் அனுமதியின்றி ஊா்வலம் சென்ற முஸ்லிம் லீக் கட்சியினா் 31 போ் கைது

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் அனுமதியின்றி ஊா்வலமாக சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் 31 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுவிக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் கம்பம்மெட்டு சாலையிலிருந்து வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள பழைய தபால் நிலையம் வரை ஊா்வலமாக சென்றனா்.

இதற்கு நகரத் தலைவா் அஸாா் தலைமை வகித்தாா். அப்போது அனுமதியின்றி ஊா்வலம் சென்ாக வடக்கு காவல் நிலைய போலீஸாா், 31 போ்களை கைது செய்து, காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT