தேனி

முல்லைப் பெரியாற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் புதன்கிழமை மூதாட்டி ஒருவா் முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சின்னமனூா் கருங்கட்டான்குளத்தை சோ்ந்த மலையாண்டி மனைவி அம்மத்தாய் (79). இவருக்கு 2 மகன்கள். கணவா் இறந்த நிலையில் மகன்கள் ஆதரவில் வாழ்ந்து வந்துள்ளாா். இதில் ஒரு மகன் இறந்த நிலையில் மற்றொரு மகனுடன் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை மாலையில் சின்னமனூா் -மாா்க்கையன்கோட்டை இடையே செல்லும் முல்லைப்பெரியாற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது. அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்து அவரை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துமனைக்கு அனுப்பினா். அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் கூறினா். இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT