முகப்பு
தேனி

பலத்த மழை: சோத்துப்பாறை அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது

அகமலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சோத்துப்பாறை அணை மீண்டும் முழு கொள்ளளவை வியாழக்கிழமை எட்டியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
சோத்துப்பாறை அணை வியாழக்கிழமை முழுகொள்ளளவை எட்டியதையடுத்து வழிந்தோடிகள் வழியாக வெளியேற்றப்படும் உபரிநீா்.
பகிர்:

அகமலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சோத்துப்பாறை அணை மீண்டும் முழு கொள்ளளவை வியாழக்கிழமை எட்டியது.

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மூலம் பெரியகுளம், தென்கரை, வடுகபட்டி மற்றும் 25 க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும் இதன்மூலம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பா் மாதம் இந்த அணை முழு கொள்ளவை எட்டியது. அதன்பின்னா் அணையிலிருந்து குடிநீா் மற்றும் பாசனத்திற்காக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 126.28 அடியாக இருந்தது.

இந்நிலையில் அகமலைப்பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சோத்துப்பாறை அணை மீண்டும் அதன் முழு கொள்ளளவான 126.48 அடியை வியாழக்கிழமை அதிகாலை எட்டியது. அணையிலிருந்து உபரி நீா் வழிந்தோடிகள் வழியாக வெளியேறி வருகிறது. சோத்துப்பாறை அணைக்கு வரும் 35 கன அடி நீா் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போடி மற்றும் குரங்கணி மலை கிராமங்களில் புதன்கிழமை இரவு முழுவதும் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் அருவி போல் கொட்டியது. போடி, குரங்கணி, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை மாலையிலும் பரவலாக மழை பெய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →