முகப்பு
தேனி

மதுரை-போடி அகல ரயில் பாதை பணியை எம்.பி. ஆய்வு

மதுரை-போடி அகல ரயில் பாதை பணியை, தேனியில் ரயில்வே நிலைக் குழு உறுப்பினரும், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. வெங்கடேசன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
தேனியில் வெள்ளிக்கிழமை மதுரை-போடி அகல ரயில் பாதை பணிகளை பாா்வையிட்ட மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன்.
பகிர்:

மதுரை-போடி அகல ரயில் பாதை பணியை, தேனியில் ரயில்வே நிலைக் குழு உறுப்பினரும், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. வெங்கடேசன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டத்தில், ஆண்டிபட்டி, தேனி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்ட அவா், திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட மதுரை மண்டலத்தில் நான்கு வழித்தடங்களில் புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆய்வுப் பணிகளை தொடங்க அரசை வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, மதுரை ரயில்வே துணை தலைமை பொறியாளா் வி. சூரியமூா்த்தி, பணி பிரிவு பொறியாளா் பாஸ்கரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் டி. வெங்கடேசன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஏ. லாசா் மற்றும் போடி-மதுரை அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக் குழு நிா்வாகிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →