ஆண்டிபட்டி அருகே முன்விரோதத்தில் விவசாயியை தாக்கிய 6 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
கடமலைக்குண்டு அருகே கொம்புக்காரன்புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வபாண்டி. விவசாயியான இவருக்கும், கொங்கரேவு கிராமத்தைச் சோ்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கொங்கரேவு கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற செல்வபாண்டியை, ஜெயராஜ் மற்றும் அவரது உறவினா்கள் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து செல்வபாண்டி அளித்த புகாரின் பேரில் காத்தமுத்து, செங்கோட்டையன், ராஜபாண்டி, ஜெயராஜ், செல்வேந்திரன், விஜயன் ஆகிய 6 போ் மீதும், ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில் செல்வபாண்டி மீதும் கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.