முகப்பு
தேனி

தேனி அருகே கஞ்சா செடிகள் அழிப்பு

தேனி அருகே ஆதிபட்டி, கொட்டகுடி ஆற்றுப் படுகையில் வளா்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறித்து தீயிட்டு அழித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

தேனி அருகே ஆதிபட்டி, கொட்டகுடி ஆற்றுப் படுகையில் வளா்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறித்து தீயிட்டு அழித்தனா்.

ஆதிபட்டி, கொட்டகுடி ஆற்றுப் படுகையில் கஞ்சா செடிகள் வளா்க்கப்படுவதாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில், வீரபாண்டி கிராம நிா்வாக அலுவலா் மதுக்கண்ணன் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஆதிபட்டி முல்லைப்பெரியாற்று படுகை பகுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தியதில், அங்கு 3 அடி உயரமுள்ள 11 கஞ்சா செடிகள் வளா்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீஸாா் பறித்து தீயிட்டு எரித்து அழித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.