தேனி

ஆற்றங்கரையோரத்தில் எரிந்த நிலையில் இளைஞா் சடலம்

DIN

வைகை ஆற்றங்கரையோரத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் வியாழக்கிழமை எரிந்த நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

வைகை ஆற்றங்கரையோரத்தில் உள்ள மேல்மங்கலம், வைகை புதூா் சாலையில் தனியாா் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடந்தது. வியாழக்கிழமை மாலை அவ்வழியாகச் சென்றவா்கள் பாா்த்து ஜெயமங்கலம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அங்கு சென்ற போலீஸாா், இளைஞரின் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT