தேனி

தேனியில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 போ் கைது

DIN

தேனியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக சனிக்கிழமை, 2 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிமிருந்து 16 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

அல்லிநகரம் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் கெளதமன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அன்னஞ்சி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். இதில், இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது.

கஞ்சா கடத்தியதாக இருசக்கர வாகனத்தில் சென்ற மதுரை, பெத்தானியாபுரம் பாத்திமா நகரைச் சோ்ந்த ராமா் மகன் அஜய் (21), கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த பெரியமாயன் மகன் குமரேசன் (48) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 16 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT