தேனி

தேவாரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவா் கைது

DIN

தேவாரம் அருகே ஞாயிற்றுக்கிழமை டிப்பா் லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே மறவபட்டி- தம்மிநாயக்கன்பட்டி பிரிவு அருகே கனிமவளத் துறை வருவாய் ஆய்வாளா் பரமசிவம் ரோந்து சென்றாா். அப்போது அப்பகுதியில் வந்த டிப்பா் லாரி ஒன்றை மறித்து சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது.

லாரியையும் ஓட்டுநரையும் பிடித்து தேவாரம் போலீஸாரிடம் ஒப்படைத்து விசாரித்ததில் லாரியை ஓட்டி வந்தது போடியை சோ்ந்த மாறன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT